Tamil cinema-song played on a South Indian classical wind instrument. This instrument referred as “Naatha swaram” made out of wood.
வரியந்தோரும் நடக்கும் யாழ்ப்பாணக் கோவில் திருவிழாக்களில் தவில் நாதசுர கச்சேரிகள் சகஜம். கோயில்களுக்கேற்ப 10, 15,25 நாட்களென திருவிழாக்கள் தொடரும். திருவிழாக் கடைசி நாட்களில் முக்கியமாக சப்பறம், தேர், தீர்த்தம் , பூங்காவனம் போன் ற திருநாட்களில் பல தவில் நாதஸ்வர வித்துவான்கள் கச்சேரிக்கு வருவார்கள். இவர்கள் கச்சேரி, கடைசியில் மேளச் சமாவுடன் முடிவு பெறும்.
பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாக்களில் 23ம் நாள் தேர் உற்சவம் நடைபெறும். காலையில் தேர் இழுத்த பிற்பாடு, பிற்பகலில் சாமி இறக்குவதற்கு முன் தவில் /நாதஸ்வரக் கச்சேரி மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும். இது இலங்கை வானொலியில் அநேகமாக ஒலிபரப்பப்பட்ட காலமும் உண்டு. (தற்போதய நிலை தெரியாது).
கிராமப்புற கோவில் திருவிழாக்களில் தவில் கச்சேரிக்குப் பின்னால் “சின்ன மேளம்” நடனக்குழு, பொப் இசை பாடல் குழு என இத்தியாதி இத்தியாதி. இதற்காக இரசிகர் கூட்டம் பல தூர இடங்களில் இருந்து படையெடுக்கும். இதைவிட இலங்கை இந்திய புகழ் பெற்ற யாழ் மகன் தட்சனாமூர்த்தியின் கச்சேரிக்கு சொல்லவா வேண்டும். தவில் மேதையை பார்ப்பதற்கென்றே மக்கள் கூட்டம் வாரி வாரியாக வந்திறங்கும்.
சிறுவயதில் மீசாலையில் வெறுங்கால்களுடன் மணல் வீதிகளை உலாத்தி வெள்ளை மாவடி பிள்ளையார் கோவில் திருவிழாக்களை பார்த்த காட்சி இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. சாவகச்சேரி நாதஸ்வர வித்துவான் ஸ்ரீ பஞ்சாபிகேசன், கோண்டாவில் பாலக்கிருஷ்ணன் நாதஸ்வர சகோதரர்கள், தவில் கணேசன், கானா மூர்த்தி –…
View original post 138 more words